மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூரில் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஞாயிறன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயங்களுடன் பாரசாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான முகமது சலீம் தலைமையில் சிபிஎம் தலைவர்கள், பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்பின் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,”பட்டாசு வெடிவிபத்து சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என சிபிஎம் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்